தீ உண்டாவதற்கு காற்று, எரிபொருள், வெப்பம் ஆகிய மூலபொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்றில் ஒன்றினை அகற்றி விட்டால் தீ அணைந்து விடும். எனவே தீயணைக்கும் விதங்கள் மூன்றாக அமைகிறது.
1. எரிபொருள் அகற்றுதல்:
எரியும் பொருளை தவிர்த்து சூழ்ந்துள்ள மற்ற பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றி விடுதல், எரியும் பொருள் சிறியதாக இருப்பின் அதனை தனியே பிரித்து விடுவது. இதனை பட்டினி போட்டு அணைத்தல் (Starvation) என்று கூறுவர்.
எ.கா: எரியும் குடிசைகளை விட்டு இதர குடிசைகள் அகற்றுதல், ஒரு தீப்பற்றிய கிடங்கிலிருந்து எரியாத பொருளை அகற்றுதல்.
2. குளிரச் செய்தல்:
எரியும் பொருளின் மீது தண்ணீர் ஊற்றுவதால் அதனை எரிவதற்கு தேவையான வெப்பநிலை குறைக்கப்பட்டு தீ அணைந்து விடும். இதனை குளிர்வித்தல் (Cooling) என்று கூறுவர்.
3. காற்றை தடை செய்தல்:
எரியும் பொருளுக்கு மேற்கொண்டு காற்று கிடைக்காமல் மூடி அணைக்கும் முறை. எரியும் பொருள் மீது நுரை பாய்ச்சுவதால், நுரை எண்ணெய் மீது படிந்து காற்றை தடை செய்து தீயை அணைத்து விடும். இதனை திணரடித்தல் அல்லது ''ஸ்மாதரிங்'' (Smothering)) என்று கூறுவர்.